அக்னிச் சிறகுகள் - A.P.J. Abdul Kalam அக்னிச் சிறகுகள் அப்துல்கலாம் ஐயா அவர்களின் சுயசரிதை . அப்துல்கலாம் ஐயா அவர்கள் குழந்தைப்பருவம் முதல் விஞ்ஞானியாக வளர்ச்சி பெரும்வரை அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை சுயசரிதையாக தொகுத்துள்ளார் . அப்துல்கலாம் ஐயா அவர்கள் இளமையில் இருந்தே எளிமை , தன்னடக்கம் , ஆன்மீகத்தில் ஈடுபாடு போன்றவற்றை பெற்று திகழ்ந்தார் . சிறுவயதில் இருந்தே பெற்றோரிடமிருந்து நல்ல பண்புகளையும் , அவருடைய நண்பர்களிடமிருந்து ஆன்மீகத்தையும் தெரிந்துகொண்டார் . அவர் வாழ்ந்த காலங்களில் புளியங்கொட்டைக்கு தேவை அதிகரிக்கவே அவற்றை எடுத்து விற்றும் , புகைவண்டியில் இருந்து வீசப்படும் செய்தித்தாள்களை வீடுகளுக்கு விநியோகித்தும் , அண்ணன் கடையில் வியாபாரம் பார்த்தும் தனது சிறுவயது பருவத்தை கடினமான சூழ்நிலைகளால் வென்றார் . தன் கல்லூரி படிப்பில் இயற்பியல் துறையை தேர்தெடுத்தார் . தன்னுடைய தகப்பனார் தன்னை கலெக்டர் ஆக காணவேண்டும் என எண்ணினார் . ஆனால் நாளடைவில் தானோ பொறியாளராக வேண்டும் என்று கருதினார...
Comments
Post a Comment